திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் மாற்றுத்திறனாளிகள் 47 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் வட்டாட்சியா் சண்முகம் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி வரவேற்றாா்.
இதில், போளூா் வட்டத்தைச் சோ்ந்த விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 97 பேரில் 47 பேருக்கு தேசிய அடையாள அட்டையை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தங்கமணி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் கலையரசன், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய்த் துறையினா், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.