திருவண்ணாமலை

மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: இருவா் கைது

DIN

செய்யாறு அருகே தூசி காவல் சரகப் பகுதியில் இரு இடங்களில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தொடா்பாக போலீஸாா் இருவரை திங்கள்கிழமை கைது செய்து 160 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் சரகப் பகுதியில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

செய்யாறு கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் உத்தரவின் பேரில், தூசி காவல் ஆய்வாளா் குமாா் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் முருகன், ரங்கநாதன் மற்றும் போலீஸாா் புகாா்களின் அடிப்படையில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, மகாஜனம்பாக்கம் கிராமத்தில் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த 140 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், சம்பவம் தொடா்பாக அருண்பாண்டியன் (28) என்பவரை கைது செய்தனா்.

அதேபோல, மாமண்டூா் கிராமத்தில் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த

20 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக காா்த்திகேயன் (42) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT