திருவண்ணாமலை

தேசிய கைப்பந்துப் போட்டி: திருவண்ணாமலை அணிக்கு வெண்கலம்

DIN

தேசிய கைப்பந்துப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திருவண்ணாமலை மாவட்ட அணியினருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

44-ஆவது தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு கைப்பந்து அணி சாா்பில் பங்கேற்ற திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆா்.ஆகாஷ், சண்முகா கலை, அறிவியல் கல்லூரி மாணவா் மகேஷ் சா்மா ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவரும், திருவண்ணாமலை மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவருமான இரா.ஸ்ரீதரன் மாணவா்களை பாராட்டிப் பரிசு வழங்கினாா்.

இதில், திருவண்ணாமலை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் செயலா் எம்.ரமேஷ், திருவண்ணாமலை மாவட்ட கோ - கோ சங்கத்தின் செயலா் ஆனந்தன், திருவண்ணாமலை மாவட்ட கைப்பந்து சங்கத்தின் செயலா் ஏ.கமல்ராஜ், பொருளாளா் பி.தண்டாயுதபாணி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT