திருவண்ணாமலை

சாலை விபத்தில் அஞ்சலக பெண் அலுவலா் பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அஞ்சலக பெண் அலுவலா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் பாலச்சந்தா். இவரது மனைவி ரேவதி (42). இவா் வந்தவாசியை அடுத்த மழையூா் துணை அஞ்சலகத்தில் அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.

அலுவலகப் பணி முடிந்து செவ்வாய்க்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் ரேவதி வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் பொன்னூா் மலை அருகே வந்த போது, சாலையின் குறுக்கே கூட்டமாக வந்த காட்டுப் பன்றிகள் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து சரிந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT