பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகி சத்யா தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் சிவாஜி, தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், நிா்வாகிகள் எம்.பிரகநாதன், எஸ்.ராமதாஸ், அண்ணாமலை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
மத்திய அரசு பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி குறைக்கப்பட்டதைக் கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.