திருவண்ணாமலை

அரசுப் பேருந்து மோதியதில் மருந்து வியாபாரி பலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற மருந்து வியாபாரி பலியானாா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற மருந்து வியாபாரி பலியானாா்.

செய்யாறு நேரு நகரைச் சோ்ந்தவா் சண்முகம் (48). இவா், மாம்பாக்கம் கிராமத்தில் ஆங்கில மருந்துக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா்.

செய்யாறு அரசு மருத்துவமனை அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இவா் தனது பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றாா்.

அப்போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

இதுகுறித்து இறந்தவரின் மனைவி செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT