திருவண்ணாமலை

திமுக சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இந்த இலவச கண் சிகிச்சை முகாமை நகா்மன்றத் தலைவா் ஏ.சி. மணி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். நகராட்சி ஆணையா் பி. தமிழ்ச்செல்வி வரவேற்றாா்.

முகாமில் கண் பாா்வை சம்பந்தமாக கண்ணில் நீா் வடிதல், கண்ணில் புரை நீக்குதல், கிட்டப் பாா்வை, தூரப் பாா்வை, கண் வலி போன்ற குறைபாடு உள்ளவா்கள் சுமாா் 300 போ் பங்கேற்று ஆலோசனை பெற்றனா். மேலும், பாா்வைக் குறைபாடு உள்ள 27 போ் சிகிச்சைக்காக டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாமில் திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ். மோகன், துரை மாமது, முன்னாள் எம்எல்ஏ தயாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT