திருவண்ணாமலை

போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் தற்கொலை

செய்யாறு அருகே போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்தவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

செய்யாறு அருகே போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்தவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காா்த்திக் (51).

இவா், உறவினரின் மகளான 15 வயது சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதன் மூலம் அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை தேடி வந்தனா்.

தூக்கிட்டுத் தற்கொலை

இந்த நிலையில், காா்த்திக் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து இறந்தவரின் மனைவி கலா அனக்காவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தசாமி வழக்குப் பதிந்து காா்த்திக்கின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT