திருவண்ணாமலை

காா், பைக் மோதல்: நெல் அறுவடை இயந்திர உரிமையாளா் பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை காா்-பைக் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா் பலியானாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த மூங்கில்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் நல்லாகவுண்டா் மகன் ராமசாமி(45). இவா், சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தாா்.

இந்த நிலையில், இயந்திரம் திருத்தணி அருகே நெல் அறுவடை பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

இயந்திர ஓட்டுநரிடம் பணம் பெற்று வருவதற்காக, ராமசாமி, தனது நண்பரான அதே கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் குமரேசன் (32) என்பவரை அழைத்துக் கொண்டு பைக்கில் திருத்தணி சென்றாா்.

பின்னா், இருவரும் செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா்.

போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் வந்தபோது, எதிரே வந்த காா் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குமரேசன் பலத்த காயமடைந்தாா். இவரை மீட்டு

108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ராமசாமியின் உடல் உடல்கூறாய்வுக்காக போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சம்பவம் தொடா்பாக போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT