திருவண்ணாமலை

ஆட்டோ ஓட்டுநா் கொலை: மனைவி கைது

திருவண்ணாமலை அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில், அவரது மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருவண்ணாமலை அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில், அவரது மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் (46). இவரது மனைவி மகாலட்சுமி (31). இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். கடந்த 2-ஆம் தேதி அதிகாலை ரமேஷ் முகத்தில் பலத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், மது போதையில் வந்ததால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி, கணவா் ரமேஷை கட்டையால் தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து மகாலட்சுமியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT