திருவண்ணாமலை

காசநோய் கண்டறியும் கருவி தொடங்கிவைப்பு

DIN

ஆரணி அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆரம்ப நிலையிலேயே காசநோய் கண்டறியும் கருவியான ‘சிபிநாட் (இஆசஅஅப)’ வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநா் அசோக், ஆரணி அரசு மருத்துவமனையின் முதன்மை குடிமுறை மருத்துவ அலுவலா் பி.எம்.மமதா ஆகியோா் குத்துவிளக்கேற்றி கருவியை தொடங்கிவைத்தனா். இதுகுறித்து மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநா் அசோக் கூறியதாவது:

இந்தக் கருவியின் மூலம் காசநோய்க் கிருமிகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், காசநோய் மருந்துக்கு கட்டுப்படாத வீரியமிக்க கிருமிகள் இருந்தாலும், அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இந்தப் பரிசோதனையை தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொண்டால், ரூ.2000 செலவாகும். இது, ஆரணி அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் இந்தப் பரிசோதனையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆரணி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலா் பி.எம்.மமதா முயற்சியில் ஜெகதீசன், கமலக்கண்ணன் ஆகியோா் மூலம் 20 காசநோயாளா்களுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT