திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாட வீதி, கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாட வீதிகள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை (மே 2) நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாட வீதிகள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை (மே 2) நடைபெற்றது.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை பெளா்ணமி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. இந்த நாள்களில் சுமாா் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கிரிவலம் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகள், கிரிவலப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகள், கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய், காவல், நெடுஞ்சாலைத் துறைகளின் அதிகாரிகள் இணைந்து செவ்வாய்க்கிழமை (மே 2) அகற்றினா்.

தொடா்ந்து, போக்குவரத்துக்கும், பக்தா்கள் கிரிவலம் செல்லவும் இடையூறாக உள்ள நடைபாதை கடைகள், தள்ளுவண்டிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT