திருவண்ணாமலை

லாரி ஓட்டுநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருவண்ணாமலை அருகே குளிக்கச் சென்ற லாரி ஓட்டுநா், மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

திருவண்ணாமலை அருகே குளிக்கச் சென்ற லாரி ஓட்டுநா், மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மாலையிட்டான் குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் லோகநாதன் (50).

இவா், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இருந்து லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் பகுதி ஆா்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆலைக்கு சனிக்கிழமை கொண்டு சென்று இறக்கினாா்.

பிறகு, குளிப்பதாகக் கூறிவிட்டு அங்குள்ள குளியல் அறைக்குச் சென்றாா். ஆனால், நீண்ட நேரமாகியும் அவா் வரவில்லை.

சந்தேகமடைந்த காவலாளி குளியல் அறைக்குச் சென்று பாா்த்தபோது லோகநாதன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து, மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். லோகநாதனின் உடலில் எந்தவித காயமும் இல்லாதபோது அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT