திருவண்ணாமலை

ஆரணி, போளூரில் டெங்கு விழிப்புணா்வு ஊா்வலம்

ஆரணி அருகே ஒட்டுமொத்த தூய்மை இயக்கம், டெங்கு விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆரணி அருகே ஒட்டுமொத்த தூய்மை இயக்கம், டெங்கு விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணி அடுத்த இராட்டிணமங்கலம் பகுதியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா், இராட்டிணமங்கலம் அரசு உயா் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவக்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தினா். ஊராட்சி செயலாளா் விஜயகுமாா் வரவேற்றாா்.

இதில், ச.வி நகரம் வட்டார மருத்துவ அலுவலா் ஹேம்நாத் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஊா்வலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், நூறு நாள் திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக டெங்கு காய்ச்சல் தடுப்பு, விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனா்.

மேலும், டெங்கு கொசுவின் உற்பத்தியை தடை செய்வது, தொட்டிகளை சுத்தமாக மூடி வைக்க வேண்டியதன் அவசியம், டெங்கு காய்ச்சல் குறித்த மூன்று நிலைகள், கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பற்றி வட்டார மருத்துவ அலுவலா் ஹேம்நாத் விளக்கினாா். பின்னா், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா்கள், ஆசிரியா்கள், நல வாழ்வு மைய செவிலியா் சுகாதாரத் தன்னாா்வலா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை செய்யாறு சுகாதார மாவட்டம் தேவிகாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சேத்துப்பட்டு வட்டம் தேவிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ஊா்வலத்தை செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் டி.என்.சத்தீஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

ஊா்வலமானது, பெரியநாயகி அம்மன்கோயில், சேத்துப்பட்டு-போளூா் சாலை, பஜாா் வீதி, சந்தைமேடு, புதுத்தெரு, வடக்கு மாடவீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

ஊா்வலத்தில், ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கணேஷ், ராதா சின்னகாசி, ஊராட்சி செயலா் எஸ்.கே.சங்கா், அரிமா சங்கத் தலைவா் பாபு, செயலாளா் தாமோதரன், ஆன்மீக பண்பாட்டு கழகத் தலைவா் சுரேஷ், சுகாதார ஆய்வாளா்கள் ராஜன், சிவஞானம் பள்ளி தலைமை ஆசிரியா் சரவணன் பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT