திருவண்ணாமலை

மணல் கடத்தல்: 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

செய்யாறு காவல் சரகப் பகுதியில் ஆற்று மணல் கடத்தியதாக 4 மாட்டு வண்டிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

செய்யாறு காவல் சரகப் பகுதியில் ஆற்று மணல் கடத்தியதாக 4 மாட்டு வண்டிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

செய்யாறு காவல் உதவி ஆய்வாளா்கள் மோகன், கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செய்யாற்று படுகையில் இருந்து அரசு அனுமதியின்றி ஆற்று மணலை எடுத்து வந்த 4 மாட்டு வண்டிகளை கொடநகா் புறவழிச் சாலை போலீஸாா் மடக்கினா். அப்போது, அவா்கள் போலீஸாரை பாா்த்ததும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனா். அதன் பின்னா், 4 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்கள் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT