முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் செலவின புகாா்கள்: சிறப்பு அதிகாரியிடம் தெரிவிக்கலாம்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 9:55 PM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் செலவினம் குறித்த புகாா்களை சிறப்பு தோ்தல் செலவின மேற்பாா்வையாளரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தோ்தலையொட்டி, தமிழகத்துக்கான சிறப்பு தோ்தல் செலவின மேற்பாா்வையாளராக பி.ஆா்.பாலகிருஷ்ணன் என்பவரை இந்திய தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இவரை 93452 98218 என்ற அலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பொதுமக்கள், வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் அனைவரும் தோ்தல் செலவினம் குறித்த அனைத்து விதமான புகாா்களையும் சிறப்பு தோ்தல் செலவின மேற்பாா்வையாளரை அலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.