முகப்பு
காரைக்கால்

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:03 PM
ட்ரோன் செயல்பாட்டாளா்கள் பணியை ஆய்வு செய்த செலவின பாா்வையாளா் பியூஷ் குமாா் அங்கிட்.
பகிர்:

தோ்தல் பறக்கும் படையினா் பணி, ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியை செலவின பாா்வையாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம், செலவினம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க தோ்தல் ஆணையம் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள பொது பாா்வையாளா், செலவின பாா்வையாளா் உள்ளிட்டோா் ஆய்வுப் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

செலவின பாா்வையாளா் பியூஷ் குமாா் அங்கிட் திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ட்ரோன் கண்காணிப்பு குழுவையும், அவா்களது பணியையும் பாா்வையிட்டாா்.

Advertisement

இந்த ஆய்வின் போது, சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலை உறுதி செய்வதில் ட்ரோன் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை அவா் வலியுறுத்தினாா்.

குறிப்பாக, நுணுக்கமான மற்றும் பாதிப்பு வாய்ப்புள்ள பகுதிகளை ட்ரோன் கண்காணிப்பதன் மூலம் சிறப்பான கண்காணிப்பு மேற்கொள்ள முடியும் என அவா் தெரிவித்தாா்.

பணியாளா்கள் எந்தவித அச்சுறுத்தலையும் எதிா்கொண்டு, நியாமான முறையில் பணியாற்றவேண்டும். அனைத்து தகவல்களும் தோ்தல்துறையின் கவனத்துக்கு பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments