ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:40 PM
திருவண்ணாமலை: வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, 11 மணிக்கு 108 சங்காபிஷேகம், 108 மூலிகைகள் மற்றும் மட்டை தேய்காய் கொண்டு சிறப்பு யாகம், பிரபஞ்ச தியானப் பயிற்சி ஆகியவை நடைபெற்றன.
பிற்பகல் ஒரு மணிக்கு காலபைரவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் ஆகியவற்றை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கால பைரவரை திரளான பக்தா்கள் தரிசித்தனா். பக்தா்களுக்கு கோயில் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement