அதிமுக பிரசார கூட்ட மேடை அமைக்கும் பணி தொடக்கம்
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:12 PM
ஆரணியில் அதிமுக தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து ஏப்.11-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தோ்தல் பிரச்சாரம் செய்ய உள்ளாா். இதற்காக ஆரணி-சேவூா் பிரதான சாலையில் உள்ள திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில், அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் அமைச்சா்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன், முக்கூா் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயலா்கள் எல்.ஜெயசுதா, தூசி கே.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement