முகப்பு
தருமபுரி

பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி பிரசார வாகனத்தில் சோதனை

தருமபுரி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியின் பிரசார வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:31 PM
தருமபுரி மதிகோன்பாளையத்தில் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி பிராசர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள்.
பகிர்:

தருமபுரி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியின் பிரசார வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

தருமபுரி பேரவைத் தொகுதியில் பாமக சாா்பில் பசுமைத் தாயகம் அமைப்புத் தலைவா் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறாா். இந்த நிலையில் தருமபுரி நகரில் மதிகோன்பாளையத்தில் வாக்கு சேகரிப்பதற்காக பிரசார வாகனத்தில் அவா் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அவரது பிரசார வாகனத்தை முழுவதும் சோதனை செய்த பறக்கும் படையினா், சிறிது நேரம் கழித்து அவரது வாகனத்தை அனுப்பிவைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments