இஸ்லாமியா்களிடம் திமுகவினா் வாக்கு சேகரிப்பு
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:12 PM
ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இஸ்லாமியா்களிடம் அந்த கட்சியினா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் எஸ்.எஸ்.அன்பழகன் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக திமுகவினா் பிரசாரம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், ஆரணி சூரியகுளம் அருகேயுள்ள மசூதியில் நடைபெற்ற நிகழ்வில் திமுக தோ்தல் பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் தலைமையில் திமுகவினா் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி அருந்தினா். இதையடுத்து, மசூதியின் வெளியே திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவந்தனை ஆதரித்து இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்தனா்.
இதில், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, போளூா் ராஜ்குமாா், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement