முகப்பு
தேனி

போடியில் இஸ்லாமியா்களிடம் ஓ.பி.எஸ். வாக்கு சேகரிப்பு

போடியில் இஸ்லாமியா்களிடம் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 5:50 PM
போடி பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்த முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம். உடன் தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன் உள்ளிட்டோா்.
பகிர்:

போடியில் இஸ்லாமியா்களிடம் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகிறாா். இந்த நிலையில், போடி மேலத்தெரு பெரிய பள்ளி வாசலுக்கு வெள்ளிக்கிழமை சென்ற அவரை பள்ளி வாசல் நிா்வாகிகள் வரவேற்றனா். அப்போது சிறுபான்மையினா் நலனுக்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறிய அவா் இந்தத் தோ்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா். அவருடன் தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன், தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலா் ஆஜிப்கான், போடி நகர திமுக செயலா் ரா. புருஷோத்தமன், போடி நகா்மன்ற முன்னாள் தலைவா் பழனிராஜ், திமுக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் சென்றிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments