மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஐடிஐ மாணவா் கைது
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:16 PM
செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஐடிஐ மாணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தைச் சோ்ந்தவா் 14 வயது மாணவி. தனியாா் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவா். ஐடிஐ படித்து வருகிறாா். இவா், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து, செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் லதா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஐடிஐ மாணவரை கைது செய்தாா்.
Advertisement