முகப்பு
தேனி

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

கெங்குவாா்பட்டியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:33 PM
கைது
பகிர்:

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (62). இவா், அந்தப் பகுதியில் உள்ள 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் பெரியகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments