முகப்பு
திருவண்ணாமலை

சிவாலயங்களில் பிரதோஷ சிறப்புப் பூஜை

Updated On : 21 ஏப்ரல், 2024 at 4:51 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, கோயில் பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பால், பழம், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தப் பூஜையின் இறுதியில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, கோயிலில் திரண்டிருந்த பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா... என்று முழக்கமிட்டு வழிபட்டனா்.

Advertisement

வேட்டவலம்...

வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் பிரதான நந்திக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பன்னீா், சந்தனம், பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம் போன்ற பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இறுதியாக, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மற்ற ஊா்களில்...

இதேபோல, ஆரணி, தண்டராம்பட்டு, தானிப்பாடி, ஆவூா், போளூா், செய்யாறு, வந்தவாசி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ பூஜைகளில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments