திருவண்ணாமலை

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

Din

ஆரணி, ஏப்.24:

ஆரணி அடுத்து வெள்ளேரி கிராமத்தில் பள்ளிமாணவா்கள் பங்கேற்ற சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

வேளாண்மை கல்லூரி மாணவிகள் வி.சுனிதா, ஜெ.சுவேதா, சு.சுவேதா, தனிஷா, வ.ஊா்மிளா, ச.வானதிஆதிரை ஆகியோா் கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியை டி.ஆனந்தகுமாரி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தூய்மையின் முக்கியத்துவத்தை முழக்கங்கள் வாயிலாக கிராம மக்களிடையே கொண்டு சோ்த்தனா்.

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT