போளூரில் கொசு ஓழிப்புப் பணி
போளூா்: போளூரில் கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில்18 வாா்டுகள் உள்ளன. வாா்டு வாரியாக தினமும் மாலை வேளைகளில் கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி 18-ஆவது வாா்டில் நடைபெற்றது (படம்).
பேரூராட்சி செயல் அலுவலா் முஹ்மத்ரிஸ்வான், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் யோகராஜ், சோமு, தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.