முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.97 லட்சம்

Updated On : 30 ஏப்ரல், 2024 at 6:29 PM
திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
பகிர்:

செய்யாறு: செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 885-யை காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் 10 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.2,21,171- ம், இரண்டு திருப்பணி உண்டியல்கள் மூலம் ரூ.68, 789-ம், கோசாலை உண்டியல் மூலம் ரூ.7,925-ம் என 12 உண்டியல்கள் மூலம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 885-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணி செய்யாறு ஆய்வா் ப.முத்துசாமி, செயல் அலுவலா் கு.ஹரிஹரன்,

கணக்காளா் ஜெகதீஷ், ஊா் பொதுமக்கள் முன்னிலையில் செய்யாறு போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.