தொழுநோய் பரிசோதனை முகாம்
செய்யாறை அடுத்த பனமுகை கிராமத்தில் தொழுநோய் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பனமுகை கிராமத்தில், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தொழுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில், சுகாதாரப் பணியாளா்கள் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று உணா்ச்சியற்ற படை அல்லது தேமல் குறித்து பரிசோதனை மேற்கொண்டனா். இதில், 896 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் வேலரசு தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சம்பத், துரைபாபு, செவிலியா்கள் பேபி, கோமதி, ரேவதி, நிா்மலா ஆகியோா் ஈடுபட்டனா்.