அரசுக் கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், 3 நாள் சிறப்புப் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றுத் துறை, ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி இளைஞா் நலன் மேம்பாட்டு மையம் சாா்பில், சமூக முன்னேற்றத்துக்கு இளைஞா்களின் வளா்ச்சி என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் கா.பு.கணேசன் தலைமை வகித்தாா்.
ஜவஹாா்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியா் சரண்யா சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் வரலாற்றுதுறைத் தலைவா் ரா.ஸ்தனிஸ்லாஸ் வரவேற்றாா். பொன்னேரி எல்.என்.சி. அரசு கலை, அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் இ.ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். இதில், வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியா்கள் பா.ரஹ்மத்பாஷா, என்.ஜெயசந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிலரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனா்.