அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா
அரியலூா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 55-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 55-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரி அனிதா நினைவு அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் சே.சித்ரா தலைமை வகித்தாா்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அறந்தாங்கி நைனா முகமது கலை அறிவியல் கல்லூரி முதல்வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளருமான சி.திருச்செல்வம் கடந்த 2018-2021 கல்வியாண்டில் படித்த 792 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.
Advertisement
Advertisement
விழாவில் அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.