அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா
அரியலூா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 55-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 55-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரி அனிதா நினைவு அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் சே.சித்ரா தலைமை வகித்தாா்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அறந்தாங்கி நைனா முகமது கலை அறிவியல் கல்லூரி முதல்வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளருமான சி.திருச்செல்வம் கடந்த 2018-2021 கல்வியாண்டில் படித்த 792 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.
Advertisement
விழாவில் அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.