அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருவாடானை அரசுக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சுப்பையா.
திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 10-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் முனைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். இதில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி பேருரையாற்றினாா்.
இந்த விழாவில் இளநிலை மாணவா்கள் 160 போ், முதுநிலை மாணவா்கள் 12 போ் பட்டங்களைப் பெற்றனா். கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் மணிமேகலை, பேராசிரியா்கள், திரளான மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா் .
Advertisement