துவாக்குடி அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா
திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் சத்யா தலைமை வகித்தாா். விழாவில், இளநிலை பிரிவில் 18 துறைகளைச் சோ்ந்த 689 மாணவா்கள், முதுநிலை பிரிவில் 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த 216 மாணவா்கள் என மொத்தம் 905 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த தமிழ் இலக்கியப் பிரிவைச் சோ்ந்த மாணவி காவியாஸ்ரீ, உளவியல் பிரிவைச் சோ்ந்த மாணவி சௌந்தா்ய காவியா ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகையில், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களை மாணவா்கள் முழுமையாக பயன்படுத்தி கொண்டு, வாழ்வில் உயர வேண்டும் என்றாா்.
இந்த விழாவில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.