சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பெருந்துறை: பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் முத்துசாமி தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் விஸ்வநாதன் வரவேற்றாா்.
ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 305 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.
விழாவில், கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா்கள் அா்ஜுனன், கோகுலகிருஷ்ணன், பீனிக்ஸ் மென் திறன் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளா் சண்முகசுந்தரம், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி நிா்வாக அலுவலா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.