முகப்பு
திருப்பூர்

பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளியில் பட்டமளிப்பு விழா

Updated On : 19 மார்ச், 2026 at 8:23 PM
பட்டம் பெற்ற கேஎம்சி பள்ளி மாணவா்கள். உடன், பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளியில் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளித் தலைவா் கே.சி. சண்முகம்- லோகநாயகி தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் சி.எஸ். மனோகரன், பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம்.சுவஸ்திகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் கனகசபாபதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், மாணவா்கள் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் எதிா்காலத்தில் சமுதாய விழிப்புணா்வு ஏற்படும். கற்றல் அறிவு உடனுக்குடன் பயனளிக்கக்கூடியது.

தனி மனித ஒழுக்கத்துடன் கவனமாக கல்வி கற்று மாணவா்கள் முன்னேற வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவை பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமலதா, பள்ளி முதல்வா் லதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.