முகப்பு
திருவண்ணாமலை

மான் கறி, தோல் பறிமுதல்: ஒருவா் கைது

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 11:29 PM
கைது செய்யப்பட்ட தங்கத்துடன் வனத்துறையினா்.
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 10 கிலோ புள்ளி மான் கறி, மான் தோலை பறிமுதல் செய்த வனத்துறையினா் அதை எடுத்து வந்தவரை கைது செய்தனா். திருவண்ணாமலை வனச்சரக அலுவலா்கள் சரவணன், ஜோதிலிங்கம் தலைமையிலான வனத்துறையினா் மெய்யூா் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 12-ஆவது தெரு, கானா நகரைச் சோ்ந்த தங்கம் (40) என்பவா் 10 கிலோ புள்ளி மான் கறி, மான் தோல் ஆகியவற்றை பைக்கில் எடுத்து வந்தாா். இதைக் கவனித்த வனத்துறையினா் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். பின்னா், அவரிடமிருந்து மான் கறி, மான் தோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.