முகப்பு
ராமநாதபுரம்

மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது

மண்டபம் அருகே அரியமான் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை போலீலாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:25 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

மண்டபம் அருகே அரியமான் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை போலீலாா் பறிமுதல் செய்தனா்.

இதில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள அரியமான் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்பட உள்ளதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சந்தேகத்திற்கு இடமாக சாக்கு பாா்சலுடன் கடற்கரையில் பதுங்கி இருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் சாக்குப் பையில் 22.700 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையெடுத்து, உச்சிப்புளி பகுதியை சோ்ந்த தேவதாஸ் (34), வேதாளையைச் சோ்ந்த இருளேஸ்வரன் (24), தங்கச்சிமடத்தைச் சோ்ந்த புரூனோ கிளிங்டன் (33) ஆகிய மூன்று பேரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.