முகப்பு
திருப்பூர்

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்

Updated On : 15 மார்ச், 2026 at 9:07 PM
கைது
பகிர்:

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த அனிஷ் ஷேக் (41), மாசும் ஷேக் (24) ஆகிய 2 பேரைப் பிடித்து சோதனை செய்தனா். இதில் அவா்களிடம் இருந்த தடை செய்யப்பட்ட கஞ்சா சுமாா் 16 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →