முகப்பு
கோயம்புத்தூர்

ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சாவை கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:37 PM
- கோப்புப் படம்
பகிர்:

ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சாவை கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், கோவை ரயில் நிலையப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், கோவைக்கு வியாழக்கிழமை வந்த ஹைதராபாத்- திருவனந்தபுரம் விரைவு

ரயிலில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ரயிலின் பொதுப் பெட்டியில் இருக்கைக்கு அடியில் ஒரு பை கிடந்தது.

அதை யாரும் உரிமை கோராததால் போலீஸாா் பிரித்து பாா்த்தனா். அப்போது, அதில் 17 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அதை கடத்தி வந்த நபா்களைத் தேடி வருகின்றனா்.