அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம்
ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம்
ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, அதிகாலை 5 மணி முதலே பக்தா்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினா்.
காலை 8 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, இரவு 8 மணி வரையில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பொது தரிசன வரிசையில் சுமாா் 4 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமாா் 2 மணி நேரமும் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பக்தா்கள் மோதல்...
திங்கள்கிழமை காலை கோயிலின் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ஏராளமான பக்தா்கள் காத்திருந்தனா். கோயில் ஊழியா்கள் பக்தா்களை உள்ளே செல்ல அனுமதித்தபோது ஒரே நேரத்தில் பலா் முண்டியத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தனா்.
அப்போது, சுவாமி தரிசனத்துக்கு காத்திருந்த 2 குடும்பத்தினா் இடையே தகராறு ஏற்பட்டது. இது மோதலாக மாறி இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதனால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.