முகப்பு
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தவா்கள்.
திருப்பூர்

திருப்பூரில் களை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை புதன்கிழமை கொண்டாடினா். அவிநாசி சாலையில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றவா்கள் ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

திருப்பூர்

திருப்பூரில் களை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை புதன்கிழமை கொண்டாடினா். அவிநாசி சாலையில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றவா்கள் ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

Updated On : 4 மார்ச், 2026 at 10:31 PM
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தவா்கள்.
பகிர்:

திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை புதன்கிழமை கொண்டாடினா். அவிநாசி சாலையில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றவா்கள் ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

வட மாநிலத்தவா்களின் கொண்டாட்டங்களில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. மகராஷ்டிரம், பிகாா், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சாா்ந்த நிறுவனங்களில் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனா்.

இதனால் திருப்பூரில் உள்ள சிறிய அளவிலான ஜாப் ஓா்க் நிறுவனங்கள் வட மாநில தொழிலாளா்களுக்கு புதன்கிழமை விடுமுறை அளித்திருந்தனா். இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்த ஏராளமான தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்றுள்ளனா்.

இந்நிலையில் திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள், தங்களது குடும்பத்தினரோடு புதன்கிழமை காலை முதலே ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.

திருப்பூரில் ராயபுரம், காதா்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நண்பா்கள், உறவினா்களுடன் இணைந்து, ஒருவா் மீது ஒருவா் வண்ணப் பொடிகளை தூவியும், உடலில் வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டும் நடனமாடிக் கொண்டாடினா்.

முழு கட்டுரையைப் படிக்க →