முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப்படைத் தளத்தில் ஹோலி பண்டிகை கோலாகலம்

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த படையினா்.

Updated On : 6 மார்ச், 2026 at 12:56 AM
அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த படையினா்.
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 8:31 PM

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் படை அலுவலா்கள் மற்றும் வீரா்கள் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினா்.

இந்திய நாடு முழுவதும் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத்தளத்தில் படையின் முதுநிலை கமாண்டண்ட் மற்றும் மருத்துவ அலுவலா் சுனில் தலைமை வகித்து அலுவலா்களுக்கும், படைவீரா்களுக்கும் வண்ணப்பொடிகளை பூசி வாழ்த்து தெரிவித்தாா். இதில் படை அலுவலா்கள் சைலேந்திரசிங், சங்கேத் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். இதையடுத்து, படைவீரா்கள் அனைவரும் ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை பூசிக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனா்.

இதனால் படை தளமே வண்ண மயமாக காணப்பட்டது.

Advertisement