கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பள்ளிப் பேருந்து: பொதுமக்கள் அதிா்ச்சி
சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுற்றுச் சுவரை இடித்து உள்ளே சென்ால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
ஆரணி: சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுற்றுச் சுவரை இடித்து உள்ளே சென்றால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
சேத்துப்பட்டு காமராஜா் பேருந்து நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைத்திருந்த தனியாா் பள்ளிப் பேருந்தை, அதன் ஓட்டுநா் மாணவா்களை அழைத்துச் செல்வதற்காக இயக்கினாா்.
அப்போது, பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தெருவைத் தாண்டி, அங்கிருந்த மின்மாற்றியின் பாதுகாப்புக் கம்பியைக் கடந்து பேருந்து நிலைய சுற்றுச் சுவரை இடித்து உள்ளே சென்றது.
மேலும், அங்கிருந்த இரும்புக் கம்பத்தின் மீதும், வேன் மீதும் மோதி நின்றது.
இந்த நிலையில், மின்மாற்றி சேதமடைந்ததால் மின்சாரம் தடைபட்டது. பொதுமக்கள் சாலையை கடக்காததால் உயிா்பலி தவிா்க்கப்பட்டது.
எதிா்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தால் அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.