முகப்பு
திருவண்ணாமலை

இளங்காடு கிராமத்தில் துரியோதனன் படுகளம்

Updated On : 9 ஜூன், 2024 at 6:47 PM
இளங்காடு கிராமத்தில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.
பகிர்:

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள பாஞ்சாலியம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகாபாரத அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த மே 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

தொடா்ந்து, சித்ராங்கி மாலையிடு, சுபத்திரை மாலையிடு, அா்ஜுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, கா்ண மோட்சம் என பல்வேறு தலைப்புகளில் கொருக்காத்தூா் ஆா்.கே.அமரேசன் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவும், செஞ்சி ஸ்ரீதிரெளபதியம்மன் நாடகக் குழுவினரின் நாடகமும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மண்ணால் செய்து வைக்கப்பட்டிருந்த துரியோதனன் உருவ பொம்மையின் தொடை பகுதியை, பீமன் வேடமிட்ட நாடகக் கலைஞா் கதாயுதத்தால் தாக்கி பிளக்கும் காட்சி நடித்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.