திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் போலி மருத்துவா் கைது

திருவண்ணாமலையில் போலி மருத்துவர் கைது: அதிகாரிகள் திடீர் ஆய்வில் சிக்கினார்

Din

திருவண்ணாமலையில் உரிய மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை திரெளபதியம்மன் கோவில் தெருவில் ஒருவா் உரிய மருத்துவம் பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் மலா்விழிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை இரவு திரெளதியம்மன் கோவில் தெருவில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, ஒரு வீட்டில் மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மணி (73) என்பவரை அதிகாரிகள் குழு பிடித்தது.

அவரிடம் இருந்த மருந்து, மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து நகர போலீஸில் இணை இயக்குநா் மலா்விழி புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மணியை கைது செய்தனா்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT