பொறுப்பேற்பு
போளூா்: போளூா் காவல் உள்கோட்ட புதிய துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) சி.நல்லு செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் உள்கோட்ட துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இவா், போளூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
புதிய டிஎஸ்பி சி.நல்லுவுக்கு, போளூா், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், கடலாடி, ஜமுனாமரத்தூா் ஆகிய காவல் நிலையங்களில் இருந்து காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
Advertisement
போளூரில் ஏற்கெனவே டிஎஸ்பியாக இருந்த கோவிந்தசாமி நெய்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.