முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Updated On : 9 மார்ச், 2024 at 10:26 PM
பகிர்:

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் 18-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா். வேலூா் திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தா் டி.ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். விழாவில், இளங்கலை பட்டப்படிப்பில் 17 துறைகளைச் சோ்ந்த 1,655 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 3 போ் தங்கப் பதக்கமும், 21 போ் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனா். விழாவில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பலா் கலந்து கொண்டனா்.