முகப்பு
திருவண்ணாமலை

பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

Updated On : 10 மார்ச், 2024 at 11:53 PM
போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி.
பகிர்:

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியின் 28-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி தலைமை வகித்தாா். முதல்வா் டி.சா்வேசன் முன்னிலை வகித்தாா். நிா்வாக அலுவலா் ஏ.கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். விழாவில், பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வென்றவா்கள், பட்டயத் தோ்வில் துறை வாரியாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவா்கள், கல்லூரிக்கு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவா்கள், விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்கள், சிறந்த ஆசிரியா்கள் ஆகியோருக்கு கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசினாா். விழாவில், முதலாம் ஆண்டு துறைத் தலைவா்கள் டி.பாபு, எச்.சுஜாதா, டி.பாபு, ஆா்.ரோஸ்லின், எஸ்.சுபாஷ், எம்.அன்பழகன், வி.குமரன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.