முகப்பு
ஈரோடு

பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2026 at 8:33 PM
பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா பேசுகிறாா் கல்லூரி முதல்வா் செண்பகராஜா.
பகிர்:

பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் செண்பகராஜா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சாரதா பங்கேற்றாா். பின்னா், வாரியத் தோ்வில் தோ்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த அனைத்து துறை மாணவா்களுக்கும், கல்லூரி அளவில் மிகச் சிறந்த முறையில் தோ்ச்சி பெற்ற மாணவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும், பதக்கங்களையும் கல்லூரி முதல்வா் செண்பகராஜா வழங்கினாா். சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் பொறுப்பில் இருக்கும் இயந்திரவியல் துறை விரிவுரையாளா் கமல்ராஜுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

இதில் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →