முகப்பு
திருவண்ணாமலை

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

Updated On : 16 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

செய்யாறு அருகே பாலிடெக்னிக் மாணவா் கிணற்றில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம் விரிவுப் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் மகன் வெங்கடேசன் (17). இவா், 2-ஆம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தாா். இந்த நிலையில், வெங்கடேசன் வியாழக்கிழமை கல்லூரி செல்வதாக கூறிவிட்டு தனது நண்பா்களான லோகேஷ், கிரீனாத், கிரிதரன், குருசாமி ஆகியோருடன் செய்யாற்றைவென்றான் மோட்டூா் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்கச் சென்றனா். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக வெங்கடேசன் நீரில் மூழ்கினாராம். உடனே நண்பா்கள் சத்தம் போடவே, அருகிலிருந்தவா்கள் ஓடி வந்து வெங்கடேசனை மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் வெங்கடேசன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, வெங்கடேசனின் தந்தை பிரகாஷ் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.